இதற்கேதானே ஆசைப்பட்டீர்கள்!
வா.மு.கோமு.
நம்மைச் சுற்றிலும் நடப்பனவற்றை இப்படியெல்லாம் நடக்கிறதென, வேதனையான விசயங்களை கூட ஐயோ என்ற பரிதவிப்பு இல்லாமல் சொல்லிக் கடந்து போகிறோம். தினச்செய்திகளைத் தரும் பத்திரிக்கைகளில் தொடர்ந்து பாலியல் வன்முறைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. கிழவர்கள் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்கிறார்கள் என்கிற தகவல் வந்து கொண்டேயிருக்கிறது. கிழவர்களைக் கண்டால் குழந்தைகளை வீட்டில் வைத்திருக்கும் பெற்றோர்கள் வீணான கற்பனை செய்து பயப்படுகிறார்கள். அவர்களுக்கு எந்தப்புற்றில் பாம்பு இருக்கும் என்று தெரியாது தான். ஆகவே புற்று என்றிருந்தால் பாம்பு இருக்கும் என்பதாக நம்புகிறார்கள்.
இண்டர்நெட்டில் பாலியல் வலைதளங்கள் இயங்குவது அனைவருக்குமே தெரியும். அவைகள் பல காமுகர்களின் வெறியைத் தணிக்கும் வேலையை செவ்வனே செய்கின்றன என்று தான் படுகிறது. அவைகள் ஜப்பான், இந்தியா, சீனா, அமெரிக்கா, ரஷ்யா என்றுபல தேசத்து ஆண் பெண் உறவுகளை பிரித்து வைத்து வீடியோக்களாக பதிவேற்றி வைத்திருக்கின்றன. ஆண் பெண் உடலுறவில் பல்வேறு வகை மாதிரிகளையும் பிரித்து வரிசைப்படுத்தி பார்வையாளர்களுக்கு சிரமத்தை குறைத்து வைத்திருக்கின்றன.
எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் யார் இவைகளை இப்படி புத்தக லைப்ரெரி மாதிரி மெனக்கெட்டு சேகரித்து அதன் வகைகளைப் பிரித்து வைக்கிறார்கள்? என்பது தான். எம்.எம்.எஸ் என்றும், ஸ்கேண்டல் என்றும் ஹோம் என்றும் லெஸ்பியன் என்றும் கிளாசிக் என்றும் கே என்றும்இவற்றில் பிரிவுகள் இருக்கின்றன. இவைகளில் தினமும் மணிக்கொருமுறை புதிய வீடியோக்கள் ஏற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
அவற்றில் ஒவ்வொரு ஆடவனும் தன்சாமார்த்தியத்தை நிறுபித்துக் காட்ட வேண்டுமென்றும், தன்னுடைய வீடியோவும் அதில் இடம்பெற்றிருக்க வேண்டுமென்றும் நினைக்கிறாகளோ என்று தான் படுகிறது. ஒரு அரசாங்க லைப்ரேரியில் தன் புத்தகமும் இருக்க வேண்டுமே! என்று எழுத்தாளன் ஆசைப்படுவது போல. ஒவ்வொரு லைப்ரேரியிலும் தாங்கள் வெளியிட்ட புத்தகங்கள் அனைத்தும் இருக்க வேண்டுமென ஒரு பதிப்பகத்தார் ஆசைப்படுவது போல.
இவற்றில் ஒரு ஆண் தான் பயன்படுத்திக் கொள்ளும் பெண்ணுக்குத் தெரியாமல் தன் அலைபேசியில் பதிவு செய்து அதை வலையேற்றுவதும் நடக்கிறது. அந்த வீடியோக்களுக்கு ரசிகர்கள் பலர் இருக்கிறார்களாம். போக பெண்கள் குளிக்கும் காட்சியை திருட்டுத்தனமாக எடுத்து வலைதளத்தில் ஏற்றப்படுகிறது. பாலியலில் ஒரு மனிதனுக்கு என்னவென்ன வக்கிரங்கள் இருக்கிறதோ அவை அனைத்துமே வீடியோக்களாக ஏற்றப்பட்டு லட்சக்கணக்கில் கிடக்கின்றன.
இதில் பெண்களே தங்கள் உடல் அழகை ரசித்து சுயமைதுனம் செய்து கொள்வதை பார்த்துரசித்ததோடு ஓயாமல் அவற்றை வலைதளத்தில் ஏற்றி விடுகிறார்கள். வக்கிரங்கள் ஆணிடமும் பெண்ணிடமும் சம அளவிலேயே இருக்கின்றன என்பதை இந்த வலைதள ரசிகர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
இம்மாதிரியான வலைதளங்கள் மனிதர்களின் அளவுகடந்த பாலியல்இச்சையை தீர்க்கும் பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கின்றன. இவைகளும் இல்லாவிட்டால் செய்தித் தாள்களில் இன்னமும் அளவுக்கு அதிகமான சம்பவங்கள் தான் நடந்ததாக அச்சேறிக் கொண்டே இருக்கும். இந்த சமயத்தில் பாலியல் கல்வியின் தேவையை அனைவருமே உணருகிறோம்.
இந்த வலைதளங்களின் பார்வையாளர்கள் என்று ஆண்களும் பெண்களும் சரிசமமாகவே இருக்கிறார்கள். அவர்கள் யாரும் இந்த வீடியோக்களை சும்மா பொம்மை பார்ப்பது போல பார்க்க வருவதில்லை. பெண்ணானவள் பல ஆண்களின் உடல் அழகை காணவும், ஆணானவன் பலவித பெண்களின் உடல் அழகை காணவுமே வருகிறார்கள்.
பாலியலில் பலவித விருப்பங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றன. லெஸ்பியன் உறவுக்காரர்கள் வலைதளத்தில் லெஸ்பியன் பிரிவிலேயே இருக்கிறார்கள். பின்புற உறவில் ஆர்வமும் காமமும் உடையவர்கள் அந்தப்பிரிவிலேயே இருக்கிறார்கள். இப்படித்தான் இங்கு நடந்து கொண்டிருக்கின்றன.
பொதுவாக மனிதர்கள் பாலியல் உணர்வுகளை உள்ளுக்குள் மறைத்து வெளியே மறுத்துப் பேசியே வருகிறார்கள். பெண்கள் வெளியே அதுவொரு கெட்ட சமாச்சாரம் என்றே பேசுகிறார்கள். அப்படியானவர்களின் காம இச்சையை தீர்க்கும் விதமாக இந்த வலைதளங்கள் செயல்படுகின்றன.
முன்பெல்லாம் மலையாள, ஆங்கில பி கிரேடு படங்கள் தான் ஆண்களின் காம் இச்சையை தீர்க்கும் வடிகாலாக இருந்து வந்தன. ஒரு திரைப்படத்தில் இரண்டு பெண்கள் நடித்திருந்தால் அந்த இருவருமே குளிக்க எப்போது செல்வார்கள்.. என்று காத்திருக்கும் முகங்கள் திரையரங்கில் நிறைந்திருந்தன. அது அரைகுறையாய் நிறைவேற்றப்பட்ட பின் படுக்கையறையில் கணவனின் நண்பனோடு எப்போது உருளுவார்கள்? என்று காத்திருந்தார்கள். அப்படி ஏதேனும் காட்சிகள் திரைப்படத்திலேயே இல்லாவிடினும் தியேட்டர்காரர்கள் பிட்டுப்படங்களை இணைத்து ரசிகர்களின் காம இச்சையை தீர்த்தார்கள். அதற்காக அவர்கள் மாமூல் கொடுத்து அழுதார்கள்.
இன்று இணையதளத்தில் ரசிகர்களை திருப்திப்படுத்துவர்கள் தனக்குத் தானே என்ற திட்டத்தின்படி செயல்படுகிறவர்கள். ரசிகர்களே ரசிகர்களை திருப்தியுறச் செய்கிறார்கள். இந்த வலைதளங்கள் தீமைகளை உற்பத்தி செய்கின்றன என்று ஒருசாரர் வாக்குவாதத்தில் ஈடுபடலாம். மார்க்கெட்டில் வரும் சில சோப்புகள் சிலருக்கு உடலில் ஒவ்வாமையை கொடுக்கத்தான் செய்யும். அந்தச் சோப்பு செரியில்ல .. வேற போட்டுப் பாக்கணும்! என்பார்கள். அப்படித்தான் எதுவும்.
குண்டாக இருக்கும் ஆண்களை சில பெண்களுக்குத்தான் பிடிக்காது. சிவப்பாக இருக்கும் ஆண்களை சில பெண்களுக்குத்தான் பிடிக்கும். உண்ணும் உணவிலிருந்து எல்லாவற்றிலும் தான் தீமைகள் இருக்கின்றன. பறவைக்காய்ச்சலில் இருந்து கண்ட காய்ச்சல் எல்லாம் சிக்கன் உணவிலிருந்து தான் மனிதர்களுக்கு வருகின்றன என்கிறார்கள். சாப்பிட வேண்டாம் என்று சத்தமில்லாமல் அதிகாரிகள் கூறி விடுவார்கள். ஒருகிலோ சிக்கனின் விலை இன்னமும் குறைந்தபாடில்லை. அதை உண்பவர்களின் எண்ணிக்கை ஓரளவு குறைந்திருந்தால் இந்த நேரம் அதன் விலையும் இறங்கியிருக்குமே!
ஞாயிறுகளை நடுத்தரவர்க்கம் சிக்கன் உணவை வைத்தே கழிக்கின்றன. ஊசியிடப்பட்டு அதிவேக வளர்சியில் வளரும் இந்தக் கோழிகளால் உடலுக்கு தீங்குண்டு என்பது அவர்கள் அறியாத விசயமல்ல. தவிர நாக்கு ருசி என்று ஒன்று பழகிப்போனதாகவே இருக்கிறது. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்பது போலத்தான். கள்ள உறவுக்கு என்றொரு மதிப்பு இருக்கத்தானே செய்கிறது. திருட்டு மாங்காய்க்கு ருசி அதிகமிருப்பது போல! மேலும் எம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்களே.. கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் கொரங்கு மாதிரி ஒரு கூத்தியாவும் வேணுமாம்.
நாம் தவறுகளை சுட்டிக்காட்டி கோஷம் எழுப்புவதால் நாளை தவறுகளே நடக்காமல் போய்விடுமா என்ன? பெட்ரோல் விலையேற்றத்தைக் கண்டித்து கோஷம் எழுப்பப்படுகிறது என்றால் 30 காசு குறைக்கப்பட்டதாக அறிவிப்பு வரும். ஒவ்வொரு பெட்ரோல் பங்குகளிலும் தங்கள் வண்டிக்கு பெட்ரோல் நிரப்புபவர்கள் விசாரித்துக் கொண்டா நிரப்பிக் கொள்கிறார்கள்? அப்படி குறைந்த 30 காசு என்னவாயிற்று? என்று விபரமாக கேட்டால், ‘எங்களுக்கு இன்னும் ஆர்டர் வரலை சார்’ என்பார்கள். எரியுற வீட்டில் எது கிடைத்தாலும் மிச்சம் தானே! என்கிற கணக்கு தான் இது.
இப்படி தவறுகள் என்பன மட்டுமே நம்மைச் சுற்றிலும் நடந்தவண்ணமே இருக்கின்றன. தவறுகள் மட்டுமே வெளிச்சமிட்டும் காட்டப்பட்டு வருகின்றன. மக்களுக்கு தவறுகள் மீது தான், அதைப்பற்றி அறிந்து கொள்வதில் தான் ஆர்வம் குவிந்திருக்கிறது. தவறை தவறே இல்லாமல் செய்வதெப்படி? என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வமாய் இருக்கிறார்கள்.
திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்குச் சென்ற பெண் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டார். குறைப்பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்தார் அவர். குழந்தையின் எடை 1300 கிராம் இருந்ததால் இன்குபேட்டரில் வைக்கப்பட்டது. மறுநாள் காலை குழந்தைகள் சிகிச்சைப்பிரிவுக்கு டாக்டர்கள் வந்த போது ஈன்றெடுத்த தாயைக் காணோம். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனைக்கு தனியாக வந்த அந்தப்பெண் பதிவேட்டில் பிருந்தா வயது 19, கணவர் பெயர் குமார், கே.ஆர்.எஸ் லே அவுட், டைமண்ட் தியேட்டர் எதிரில், திருப்பூர். என்று முகவரி கொடுத்திருக்க போலீசார் விசாரிக்கையில் முகவரி போலியானது என்றும், அந்தப்பெண் திருமணமாகாதவள் என்பதும் தெரியவந்தது. அந்தப்பெண் குறித்து போலீசார் விசாரித்தவண்ணமிருக்கிறார்கள்.
அந்தப்பெண் மீண்டும் இன்னொரு காதலனை தேடிப்பிடித்து குடும்ப வாழ்க்கை வாழலாம். மிக தைரியமான பெண் என்று தான் தெரிகிறது. 100 ரூபாய் மாத்திரையில் முடிந்திருக வேண்டிய விஷயம் என்று அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் இருந்திருக்காது. இதுவே கிராம சூழ்நிலையில் வாழும் பெண் என்றிருந்தால் தற்கொலை முடிவுக்கு சென்றிருக்கக்கூடும். பிள்ளை ஒன்று பெற்றாள், விட்டு விட்டுப் போய் விட்டாள் என்ற தகவலை வைத்து குட்டி ஜப்பானில் போலீசார் எந்தப்பெண் என்று தேடுவார்கள்/ நாள் ஒன்றிற்கு நகரில் ஒரு பிரச்சனையா நடக்கிறது?
கடந்த 20 வருடங்களில் இந்தியாவில்20 கோடி குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டு இருப்பதாக சமூக நலவாரியம் தெரிவிக்கிறது. 3 நிமிடங்களுக்கு ஒருமுறை பெண்களுக்கு எதிராக குற்றம் இந்தியாவில் நடக்கிறது. 9 நிமிடங்களுக்கு ஒருமுறை கணவராலோ, உறவினராலோ கொடுமைகளுக்கு பெண்கள் ஆளாகிறார்கள். 15 நிமிடத்திற்கு ஒருமுறை பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். 29 நிமிடத்திற்கு ஒருமுறை ஏதாவது ஒரு பெண் கற்பழிப்புக்கு ஆளாகிறாள்.
தமிழகத்தில் 560 ஸ்கேன் மையங்கள் கொண்ட அரசு மருத்துவமனைகள் உள்ளன. 8 மரபணு ஆய்வுக்கூடங்களும், 3943 அல்ட்ரா சவுண்ட் சோதனைக் கூடங்களும், 38 கருத்தரிப்பு மையங்களும், 11 குரோமோசோம்கள் குறித்து ஆராயும் ஆம்னியோ சென்சிடிங் மையங்களும் பதிவு பெற்று இயங்குகின்றன.
இவற்றை அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இப்படிப்பட்ட மையங்களில் பெண் குழந்தைகள் கருவிலேயே கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவர்கள் மூலம் கொலை செய்யப்படுகின்றன. எங்களுக்கு பெண் குழந்தை தான் வேண்டுமெனச் சொல்லும் தம்பதியினரை இனியேனும் தனித்து பாராட்டி அரசாங்கம் சலுகைகளை வழங்கலாம்.
ஒரு காலத்தில் பெண் குழந்தைகளுக்கு கள்ளிப்பால் கொடுப்பார்கள். இப்போது வயிற்றில் உயிர்த்துடிப்போடு இருக்கும் பெண் சிசுக்களை துண்டு துண்டாக வெட்டியெடுத்து கொலை செய்கிறார்கள். மருந்துக்கடைகளில் கருக்கலைப்பிற்கான மாத்திரைகள் டாக்டரின் பரிந்துரை இல்லாமலேயே கிடைக்கிறது. கருக்கலைப்பிற்கு மருத்துவமனைகள் வாங்கும் தொகைகள் என்று பார்த்தால் மூன்று மாத கர்ப்பத்தைக் கலைக்க 3000 ஆயிரம் ரூபாயும், ஐந்து மாத கர்ப்பத்தைக் கலைக்க6000 என்றும் ஏழுமாத கர்ப்பத்தைக் கூட பணத்திற்காக மருத்துவர்கள்\ கலைப்பதாகவும் கூறுகிறார்கள்.
கணவரின் நிர்பந்தத்தாலோ அல்லது கணவரின் குடும்பத்தின் நிர்பந்தத்தாலோ அல்லது கள்ள உறவினாலோ சிசுக்கலைப்பிற்காக பெண்கள் மருத்துவமனைக்கு பரிதாப ஜீவன்களாக வருகிறார்கள். கருக்கலைப்பு என்பது சட்ட ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தவறான ஒன்று. பணத்தைக் கொடு கருவுவைக் கலைத்து அனுப்புகிறோம் என்று மருத்துவமனைகள் செயல்படுவது மருத்துவத்திற்கு அழகல்ல.
குழந்தையின்றித் தவிப்பவர்கள் உங்களைச் சுற்றிலும் கூட இருக்கிறார்கள். குழந்தை வேண்டுமென கோவில் கோவிலாய் சுற்றுபவர்கள் உங்களைச் சுற்றிலும் இருகிறார்கள். குழந்தை என்பது ஒரு உயிர். மருத்துவர்கள் கருக்கலைப்பிற்கு வரும் பெண்களின் கணவர்களை வரவழைத்துப் பேசலாம். ஆனால் டெங்கு, பறவை, மர்மக்காய்ச்சல் என்று மருத்துவமனையில் கூட்டம் நிரம்புவதால் அதற்கெல்லாம் அவர்களுக்கு நேரமில்லை.
பிழைக்க வழி சொல்லுங்கள் நண்பா! என்றொருவர் வந்தார். இருக்கே! என்றவன் தீபாவளி பலகாரச்சீட்டு ஆயிரம் அடித்து மாதா மாதம் வீடு வீடாய் சென்று தொகை வாங்கி சேர்த்துடா! என்றேன். கொஞ்சம் யோசித்தான் அதன் விளைவுகளை. கடைசியாக நல்லதாகத்தான் படுகிறது என்றான். தீபாவளி நெருங்கும் சமயம் ஊரை காலி செய்து விட்டு ஓடி விடு! என்றேன்.
அடுத்ததாக கேரளாவுக்கு அரிசி கடத்துடா! என்றேன். ஐயோ நண்பரே! என்றான். இப்ப நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? என்றான் என்னிடமே! தீவாளி செலவுக்கு பைக்கு திருடி வித்தேன். தீபாவளி முடிஞ்சு பிடிச்சாங்க, உள்ளார உக்காந்துட்டு வர்றேன், என்றேன். சீட்டு ஒன்னு சேர்த்தலாம்னு இருக்கேன்டா அடுத்ததா மூனு மாசத்துக்கு ஒருக்கா 4000. மொத்தம் பதினஞ்சு பேரு.. உன் பேரை சேர்த்திக்கறேண்டா.. என்றதும் எஸ்கேப்டா சாமி! என்றோடினான்.
மகளைச் சீரழித்த வளர்ப்புத் தந்தை, பணத்துக்காக மைனர் மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தந்தை, ஓடும் ரயிலில் இருந்து தள்ளப்பட்ட இளம்பெண் உயிருக்கு ஊசல் என்று கேரளாவிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்க, அந்தப் பட்டியலில் கிட்னியை விற்க ஒப்புக்கொள்ளா விட்டால் மகனைக் கொன்று விடுவேன் என மிரட்டிய காதல் கணவனின் பேச்சைக் கேட்டு சிறுநீரகத்தை விற்ற இளம்பெண் மஞ்சு சமீபத்தில் ஆங்கிலப்பத்திரிக்கைக்கு தந்த பேட்டியில் கூறியது…
கொச்சியில் டீ எஸ்டேட்டில் நான் வேலையில் இருந்தேன். அதே டீ எஸ்டேட்டில் சேல்ஸ் பிரதிநிதியாக வேலை பார்த்த பினு என்பவரை 2005ல் சந்தித்தேன். பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொண்டதால் இருவரும் வீட்டிற்குத் தெரியாமல் திருமணம் செய்து அந்த தீயை அணைத்தோம். தீ அணைந்த ஒரு வருடத்தில் ஆண் மகவு ஒன்றை ஈன்றெடுத்தேன். பினுவின் குடும்பம் 2009ல் கடுமையான கடன் தொல்லையில் சிக்கித் தவித்தது.
அதே நேரத்தில் தனது நண்பர் ஒருவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மாற்று சிறுநீரகம் தேவைப்படுவதாகவும் எனது சிறிநீரகத்தை விற்றால் 10 லட்சம் தொகை கிடைக்குமெனவும், அதை வைத்து கடன்களை தீர்த்து விடலாமென்றும் பினு கூறினார்.நான் அதற்கு, கிசுக்கணும்! உன்னுதை வித்துக்கோ, கடனைக் கட்டிக்கோ! என்றேன். எனது மகனை தூக்கிப்போய் சினிமா பணியில் கொன்று விடுவேன் என்று மிரட்டினார் பினு. தாய்ப்பாசத்தால் சம்மதித்தேன். அறுவை சிகிச்சைக்குப் பிறகு பினுவைக் காணவேயில்லை. பினு எஸ்கேப் ஆகிவிட்டதை தெரிந்து கொண்டேன். பல இடங்களில் தேடியும் பினுவைக் காணாததால் 2011ல் புகார் கொடுத்தேன்.
இந்தப் பெண்ணின் பேட்டியிலிலிருந்து நம் தமிழ்ப்பெண்கள் ஏதாவது உணர்ந்து கொள்வார்களா? என்றே யோசித்தேன். ஏற்கனவே கழுதைப்புலியை முறத்தால் விரட்டிய பாரன்பரியத்தில் வந்த பெண்கள் தான் இன்று கரப்பான் பூச்சிக்கு பயந்து காதலன் மீது தாவிக் குதிக்கிறார்கள்.
மாரியம்மன் கோவிலில் அம்மன் சிலை மீது பச்சைக்கிளி ஒன்று வந்து அமர்ந்து கொண்டதாம். கோவில் நிர்வாகிகள் கூறுகையில் ஒரு மாதத்திற்கு முன்பாக பூஜை நடந்து கொண்டிருந்த போது இடது கண்ணில் காயத்துடன் பறந்து வந்த கிளி கர்ப்பக்கிரகத்தினுள் சென்று அம்மன் சிலை மீது உட்கார்ந்து கொண்டது. அன்று முதல் கிளியை வெளியே கொண்டு வந்து விட்டாலும் மீண்டும் அம்மன் சேலையைப் பிடித்து மேலேறி உட்கார்ந்து கொள்கிறது.
பூசாரி கூறுகையில் அபிஷேகம் செய்யும் போது கீழே இறங்கி வந்து விடுகிறது. மற்ற நேரங்களில் அம்மன் மீதே அமர்ந்திருக்கிறது. இரவு கோவிலை பூட்டும் போதும் கருவறையை விட்டு வருவதில்லை. பழம், பொங்கலை விரும்பி சாப்பிடுகிறது. அர்ச்சனை செய்யும் போதோ, மணி அடிக்கையிலோ பயப்படுவதில்லை.
சுற்று வட்டார பொதுமக்கள் கூட்டமாய் வந்து கிளியை பார்த்து வணங்கிச் செல்கின்றனர். முன்பு மாட்டின் கண்ணில் ஒரு தலைவர் தெரிகிறார் என்று கும்பல் கூடியது. வருமானம் இல்லாத கோவில்களில் நல்ல பாம்பாட்டியிடம் பேசி பல் பிடுங்கிய பாம்பை சிலை மீது நீண்ட வாக்கில் படுக்க வைத்து விட்டால் கோவிலில் கூட்டம் கூடும். சர்க்கஸ் கம்பெனியாரிடம் பேசி புலி, சிறுத்தை என்று கூட முயற்சிக்கலாம். குரங்கை வைத்து தீபாராதனை காட்டலாம். ஜனங்களுக்கு எல்லாமே அதிசயம் தான்.
இருமுடி ஏந்தி சபரிமலை சென்ற +2 மாணவனை காட்டு யானை மிதித்துக் கொன்றது. அவனுடன் சென்ற ஆறு பேரையும் யானை தாக்கியதில் அவர்கள் காயமடைந்தனர். நம் ஆட்கள் எதையும் உருப்படியாக செய்வதேயில்லை. மாலை போட்டு விட்டேன் என்று சொல்லி டாஸ்மார்க் பாரில் நிற்பான். குடியை சிலநாட்களேனும் விட்டொழிப்போம் என்பதற்காக மாலை போட்டுக் கொள்வான். பின் மாலை நேரத்தில் மாலையை கழற்றி வீட்டில் சாமி பட்த்தின் முன்பு வைத்து விட்டு வந்து குவாட்டர் குடிப்பான் மீன் சில்லி சாப்பிட்டபடி. வாயில் சிகரெட் புகையும். பின்பாக வீடு சென்று குளித்து துன்னீரு பூசுக் கொண்டு மீண்டும் மாலையை அணிந்து கொள்வான். போக இதை நான் தவறென சொல்ல மாட்டேன். அது அவன் பிரியம்.
மனைவியின் பாலியல் டார்ச்சர் பொறுக்க முடியாமல் சர்க்கரை வியாதிக்காரன் அதற்காகவே பயந்து முருகனுக்கு, ஐய்யப்பனுக்கு என்று மாலை போட்டுக் கொள்வது பரிதாபத்திலும் பரிதாபம் தானே!. சபரிமலைக்குச் சென்ற வேன் கவிழ்ந்து ஆறு பேர் மரணம் என்று படிக்கிறோம். தப்பு செஞ்சுட்டு சாமியத் தேடிப்போனா இப்படித்தான் நடக்கும் என்று சமாதானம் பேசிக் கொள்கிறோம். நம் டாஸ்மார்க் சாமி லெக் பீஸ் கடித்துக் கொண்டே சியர்ஸ் போட்டு அடிக்கிறது.
000